Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கன மழையால் இரு வெவ்வேறு இடங்களில் இடிந்து விழுந்த வீடு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்



உத்திரமேரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி இவரது கணவர் பழனிவேல் இவர்களது வீட்டின் அருகே மழை நீர்கால்வாயானது தூர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக விஜயலட்சுமியின் வீடு கடும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதுகுறித்து வருவாய்துறை அலுவலர்களுக்கு விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும்  எடுக்காத நிலையில் நேற்று இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக விஜயலட்சுமி வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.  இதனால் வீட்டின் ஒருபுற சுவர் திடீரென இடிந்து விழுந்தது. சுவரின் அருகே யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்தவர்கள் உயிர் தப்பினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலவாக்கம் திருமுக்கூடல் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதேப் போல் உத்திரமேரூர் அடுத்த காக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது வீட்டில் நேற்று இரவு மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து வீட்டின் பின்புற சுவர் இடிந்து விழுந்தது. அருகில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் இல்லாமல் வீட்டில் இருந்தவர்கள் தப்பினர்.

No comments