Disqus Shortname

புல்லம்பாக்கம் கிராமத்தில் இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் நிவாரண உதவிகள் வழங்கல்

உத்திரமேரூர் அடுத்த புல்லம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த 9 இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் உத்திரமேரூர் வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன், ஒன்றிய குழு உறுப்பினர் அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுதாலட்சுமி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு ஒன்பது இருளர் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவினை வழங்கினார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments