Disqus Shortname

உத்திரமேரூரில் ரூ- 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தினை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

உத்திரமேரூர்

உத்திரமேரூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 கோடியே 15 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட 500 மெட்ரிக் டன் மற்றும் ஆயிரம் மெட்ரிக் டன் கிடங்குகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி மற்றும் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த உத்திரமேரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை மறை முக ஏலம் மூலம் விற்பனை செய்து பயன் அடையலாம். மேலும் விவசாயிகள் விளைப் பொருளுக்கு சரியான விலை கிடைக்காத பட்சத்தில் 15 நாட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் விளைப் பொருட்களை இருப்பு வைத்து பயனடையலாம். என வேளாண் விற்பனைக் குழு தனி அலுவலர் மற்றும் செயலாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

No comments