Disqus Shortname

உத்தரமேரூர் பேரூராட்சியில் வேட்புமனுத்தாக்கலானது இன்று துவங்கியது

 காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சியில் 11,462 பெண் வாக்காளர்களும் 10,546 ஆண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் என மொத்தம் 22,019 வாக்குகள் உள்ளன பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 9 பெண் வேட்பாளர்கள் 9  வேட்பாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்புமனுத்தாக்கலானது இன்று துவங்கியது இதையொட்டி பேரூராட்சி வளாகத்தில் போலீசார் பலத்த  பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் உள்ளாட்சித் தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு பெற வரும் போது அவர்கள் முககவசம் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் உடல் பரிசோதனை செய்த பின் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு முழுவதும் முழு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

No comments