Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பரபரப்பு வீட்டில் நுழைந்து செயின் பறிப்பு

உத்திரமேரூர் 13-07-2021 


 உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தை சேர்தவர் தங்கபஞ்சாட்சரம் 64 இவர் அதிமுகவில் மத்திய ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி தெய்வநாயகி 59, நேற்று இரவு தெய்வநாயகி புதியதாக கட்டியுள்ள வீட்டிலும் தங்கபஞ்சாட்சரம் அருகில் உள்ள பழைய வீட்டிலும் தனித் தனியே உறங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இரவு சுமார் 1 மணியளவில் மர்ம நபர்கள் இருவர் தங்கபஞ்சாட்சரம் வீட்டின் வெளிப்புறக் கதவை பூட்டிவிட்டு புதிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவிலிருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் உறகிக்கொண்டிருந்த தெய்வநாயகியின் கழுத்திலிருந்த 12 சவரன் தங்க ஜெயினை அறுத்துள்ளனர். தூக்கத்திருந்த தெய்வநாயகி எழுந்து கூச்சலிட்டார். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்த பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற குற்றச் சம்பவங்கள் உத்தரமேரூரில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் உத்தரமேரூர் பகுதிவாசிகள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் கடந்த ஒரு வாரத்தில் தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் போலீஸ் உயரதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்

No comments