Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அறியவகை ஆஸ்துரேலியன் ஆந்தை

உத்திரமேரூர் ஏப், 09
 உத்திரமேரூர் அடுத்த சோமநாதபுரம் பகுதியில் குடிநீர் டேங்கு அருகில்
காயங்களுடன் அபூர்வமான ஆந்தை ஒன்று விழுந்து கிடந்தது. அவ்வழியே சென்ற அப்பகுதி மக்கள் ஆந்தையை கண்டவுடன் உத்திரமேரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அந்த அறியவகை ஆந்தையை பிடித்தனர். அது ஆஸ்துரேலியன் ஆந்தை எனத் தெரியவந்தது. காயங்களுடன் இருந்த அந்த ஆந்தைக்கு முதலுதவி செய்து,
பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

No comments