Disqus Shortname

உத்திமேரூரில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி கட்சி அலுவலகத் திறப்பு விழா

உத்திரமேரூர் ஏப், 17

உத்திரமேரூர் சட்ட மன்ற தொகுதி தேமுதிக மக்கள் நல கூட்டணி சார்பில்
தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான
ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு உத்திரமேரூர்
சட்ட மன்ற தொகுதியில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும்  தேமுதிக வேட்பாளர் இராஜேந்திரன் உத்திரமேரூரில் உள்ள அம்பேத்கர், அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தலைவர்கள் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பஜார் வீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து வணிகர்கள் மற்றும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து  நிர்வாகிகளுக்கு தேமுதிக மக்கள்  நலக் கூட்டணி சார்பில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் இராஜேந்திரனை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தொண்டர்கள்
அயராது உழைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தேமுதிக ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், நகர செயலர் குமார், விசிக நிர்வாகிகள் தி.வ.எழிலரசன், மல்லிமாறன், தமாக நிர்வாகிகள் மலையூர்புருஷேத்தமன், ஜெயகுமார், மதிமுக நிர்வாகிகள் கருணாகரன்,மணிவண்ணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பாஸ்கர், பெருமாள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.

No comments