உத்தரமேரூர் தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார்
அரசியல் கட்சியினரின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் செலவின பார்வையாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்தனர். 23 April 2016:
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி வெளியிட்ட அறிக்கை:
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்,
அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்க அனைத்து
தொகுதிகளுக்கும் உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையிலான குழு
கண்காணித்து வருகிறது.
இக் குழுவினரின் பணிகள், பறக்கும் படை கண்காணிப்புக்
குழுக்களின் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்
செலவின பார்வையாளர்களை நியமித்துள்ளது.
தேர்தல் செலவின பார்வையாளராக சோழிங்கநல்லூர், பல்லாவரம்
தொகுதிக்கு ரவீந்தர் சிங் யாதவ்: 73970 28834, ஆலந்தூர் தொகுதிக்கு
எஸ்.கே.மித்ரா: 73970 28835, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு ராவத்: 73970
28836, தாம்பரம், செங்கல்பட்டு தொகுதிகளுக்கு கிரண் ரெட்டி: 73970 28829,
திருப்போரூர், செய்யூர் (தனி) தொகுதிகளுக்கு அன்கூர் அல்யா: 73970 28825,
மதுராந்தகம் (தனி), உத்தரமேரூர் தொகுதிகளுக்கு பிரியதர்ஷன் மிஸ்ரா: 73970
28826, காஞ்சிபுரம் தொகுதிக்கு ஜெகதீஸ் ஜாங்கிட்: 73970 28827 ஆகியோர்
நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments