உத்திரமேரூரில் அ.தி.மு.க தேர்தல் அலுவலகம் திறப்பு விழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிகுட்பட்ட உத்திரமேரூர் பஜார் வீதியில் அ.இ.அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்தை நேற்று அ.தி.மு.க
உத்திரமேரூர் தொகுதி வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் திறந்து வைத்தார். மேலும் அ.தி.மு.க
நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து உத்திரமேரூர் பஜார் வீதி, சின்னநாராசம்
பேட்டை, காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க
வேண்டி ஊர் வலமாக சென்று பொதுமக்களிடமும்,
வியாபாரிகளிடமும் வாக்கு சேகரித்தார். முன்னதாக பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜீ.ஆர்
சிலை அண்ணா சிலை, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில்
ஒன்றிய குழு தலைவர்கள் ஆர்.கமலக்கண்ணன், வரதராஜீலு, துணைத் தலைவர் ரவிசங்கர், ஒன்றிய
செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, தண்டரைதணிகைவேல், குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி,
சசிகுமார், சத்தியாநரசிம்மன், ஊராட்சி மன்ற தலைவர்கள் புலியூர்பழனி, பெருநகர்விஜயகுமார்,
மானாம்பதிசம்பத், ஒட்டந்தாங்கல்ரேவதிராஜேந்திரன், தோட்டநாவல்வரலட்சுமிகருணாநிதி உட்டபட
அதிமுக ஒன்றிய, கிளை கழக, மகளிரணியினர், இளைஞர்இளம்பெண்கள் பாசரை நிர்வாகிகள் உட்பட
ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments