Disqus Shortname

உத்திரமேரூரில் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

உத்திரமேரூர் ஏப், 20

உத்திரமேரூரில் திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திங்கள் கிழமை(18-04-2016) 
நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.நகர செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்டவிவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணைஅமைப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற திமுக வேட்பாளரும் காஞ்சி தெற்குமாவட்ட கழக செயலாளருமான க.சுந்தர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்குஆலோசனைகள் வழங்கினார். இதில் வருகின்ற சட்ட மன்ற தோத்லில் உத்திரமேரூர்தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற செய்யவேண்டும், ஒன்றிய, கிளை, வார்டு, நிர்வாகிகள் வீடுதோரும் சென்று அதிமுகஅரசின் அவலங்களை எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். மேலும் கலைஞரின்சிறப்பான தேர்தல் அறிக்கை எடுத்து கூறி வாக்கு சேகரித்து  திமுக வெற்றிபெற அயராது உழைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சுப்பைய்யா, தனிஸ்லால்,கோவிந்தராஜன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் பலர்கலந்துகொண்டனர்

No comments