Disqus Shortname

உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கருட சேவை

உத்திரமேரூர் ஏப்,18
உத்திரமேரூரில் ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத சுந்தரவரதராஜ பெருமாள்கோவிலில்
சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன்
துவங்கியது ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரவரதராஜர் வீதியுலா நடந்தது.
நேற்று சகஸ்ரநாமபூஜை, லட்சுமிபூஜை,கோபூஜை, ஆண்டாள் திருப்பார்வை நடந்தது  3ம் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு சுந்தரவரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார் ராயர்தெரு,கருணீகர்தெரு.திருமலை
யார்பிள்ளைதெரு, பஜார் வீதி உள்ளிட்ட தெருகளில் வீதியுலாவந்தார் பின்னர்  பஸ்நிலையத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயிலை வந்தடைந்த போது ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து மீண்டும் சுவாமி கோயிலை சென்றடைந்தது. விழாவிற்காக உத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments