Disqus Shortname

உத்திரமேரூரில் புதிய ரக நெல் அறிமுகம்

உத்திரமேரூர் பிப்08: புதிய வீரிய ஒட்டு ரக நெல் டி.ஆர்.எச் 813 அறிமுக விழா திருப்புலிவனம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. விவசாயி சுப்பையா தலைமை தாங்கினார். விவசாயிகள் திருவேங்கடம், கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். டாடா நிறுவன மண்டல விற்பனை மேலாளர்கள் தனபால், நீரஜா, விற்பனை அலுவலர் பிரபுராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புதிய ரக நெல்லில் வாளிப்பான கதிர்கள் உருவாகும். மேலும் கதிர் ஒன்றுக்கு சுமார் 100 முதல் 150 மணிகள் வரை மகசூல் பெறும். இதன் மூலம் விவசாயிகள் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.இதைத் தொடர்ந்து முருகன் பண்ணையில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள புதிய ரக நெற்பயிர்களை விவசாயிகள் பார்வையிட்டனர்.

No comments