Disqus Shortname

பிலாபூரில் கூடுதல் வகுப்பறை பள்ளிக்கட்டிடம் திறப்பு விழா

உத்திரமேரூர் பிப்,22
உத்திரமேரூர் அடுத்த பிலாபூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் கட்டிடம்
திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது. விழாவில் மதுராந்தகம் கூட்டுறவு
சக்கரை ஆலை சங்கத் தலைவர் அப்பாதுரை தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் மேரிஜான்ஸ்ரெனட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுராந்தகம் எம்.எல்.ஏ கணிதாசம்பத்
சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம்
சார்பில் 11 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கொண்ட புதியதாக கட்டப்பட்டுள்ள
கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளரும் பட்டதாரி ஆசிரியருமான சங்கர் சிறப்பாக செய்திருந்தார். விழாவில் பள்ளி மாணவ-மாணவியர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

No comments