Disqus Shortname

உத்திரமேரூரில் நாளை மயானகொள்ளை திருவிழா

 உத்திரமேரூர் பிப்-17:

உத்திரமேரூரில்  உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை  (18ம் தேதி) மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது.  உத்திரமேரூர் நங்கையர் குளம் அருகில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாத அமா வாசை அன்று, மயானகொள்ளை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதை முன்னிட்டு, இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரியும்,  நாளை  புதன்கிழமை மயானக் கொள்ளை உற்சவமும் நடைபெறுகிறது.

விழாவினை முன் னிட்டு, ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, காப்பு கட்டி, தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், தேர் இழுத்தல், என, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். காலை அம்மனுக்கு சிறப்பு  அபிஷேக  அலங்காரமும் , பகல் 12-00 மணிக்கு மேல் அன்னையின் மகிமையை கண்ணுறும் வகையில் பக்தர்களின் மெய்சிலிர்க்க வைக்கும்  பிரார்த்தனை வழிபாடுகளுடன் அம்மன் திரு வீதி உலாவும், மாலை  6.00 மணிக்கு  மயானகொள்ளை உற்சவமும், இரவு   கேளிக்கை  கூத்தும்    இவ்வருடம்  வெகுவிமரிசையாய் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்

No comments