Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றியத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

உத்திரமேரூர் பிப், 24

உத்திரமேரூர் ஒன்றியங்களில் நேற்று மக்கள் முதல்வர் அ.இ.அ.தி.மு.க நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா 67-வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக நடந்தது. ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினர்கள். காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத்பா.கணேசன் கலந்து கொண்டு உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் உள்ள எம்.ஜீ.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மற்றும் பல்வேறு பயனாளிகளுக்கு சைக்கிள்கள், மகளிருக்கு தையல்மிஷின்கள் வழங்கினார். நடுத்தெருமாரியம்மன் கோவிலில் பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன் முன்னிலை அன்னதானம் வழங்கினார். மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் பொ.சசிகுமார், சத்தியாநரசிம்மன், பழனி, துரைபாபு, விஜய், வேலாயுதம், ஜெய்பிரகாஷ், டீகடைவிஜி, உமாபதி, இளையராஜா, சதிஷ், குணா ஆகியோர் 1500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள். ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், முன்னிலையில் மானாம்பதியில் கோவில்களில் பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. களியாம்பூண்டியில் ஒன்றியக்குழு உறுப்பினர் தங்க.பஞ்சாட்சரம் முன்னிலையில் ஏழை குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது. திருப்புலிவனத்தில் ஒன்றியகழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு முன்னிலையில் எம்.எல்.ஏ.வாலாஜாபாத்பா.கணேசன் திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் காலை 11.10 மணியளவில் வில்வமரக்கன்றுகள் நட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளும், வேட்டிசேலைகள் வழங்கினார். இதேபோல் வெங்கசேரியை அடுத்த கடம்பரேஸ்வரர் கோவிலில் வில்வமரக்கன்றுகள் நடப்பட்டது. உத்திரமேரூர் நகர அ.தி.மு.க இளைஞரணி செயலாளர் சேகர் முன்னிலையில் முத்துபிள்ளையார் கோவிலில் ஏழை எளிய மக்களுக்கு எம்.எல்.ஏ ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஸ்ரீ.மாதிரியம்மன் வீரஆஞ்சநேயர், ஸ்ரீ.சுந்தரவரதராஜபெருமாள், ஸ்ரீ.பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில் போன்ற பல்வேறு கோவில்களில் விசேஷ பூஜைகள் நடத்தினார்கள். ஒன்றிய பொருளாளர் வி.அண்ணாதுரை, தண்டரைதணிகைவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெருநகர்விஜயக்குமார், புலியூர்பழநி, பூந்தண்டலம்ராஜேந்திரன் ஆகியோர்கள் அன்னதானங்கள் வழங்கி கோவிலில் சிறப்புபூஜைகள் நடைபெற்றது. அ.பி.சத்திரம் கோ.பெருமாள், பெருநகர் கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments