Disqus Shortname

உத்திரமேரூரில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி மஹாசிவராத்திரி மயானகொள்ளை உற்சவம்

உத்திரமேரூர் பிப், 18
உத்திரமேரூரில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு  நேற்று முன்தினம்  இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பூங்கரகம், மேளக்கச்சேரி, வானவேடிக்கைகளுடன் திருவீதி உலா நடைப்பெற்றது. அதன்பின் நேற்று மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைப்பெற்றது. விழாவையொட்டி நேர்த்திகடன் செய்ய 7 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் 8ம் நாளான நேற்று எலும்பிச்சை, ஆப்பில் போன்ற பழங்களை தங்களது உடல் முழுவதும் குத்திக் கொண்டும், முதுகில் அலகுகுத்தி கார். வேன், டிராக்டர்கள், உரல்கள் போன்றவற்றை இழுத்தும் கட்டாட்டம்,  டிராக்டரில் அந்தரத்தில் தொங்கியபடியும் மேட்டுத் தெரு, கருணீகர் தெரு, சின்னநாராசம் பேட்டைத் தெரு, வடக்கு ரெட்டித் தெரு, செங்குந்த பிள்ளையார் கோவில் தெரு போன்ற தெருக்களின் வழியே ஊர்வலமாக மயானத்தை சென்று அடைந்தனர். பின்னர் பக்தர்கள் காய்கறிகள், பழங்கள், விளைபொருட்களை  மயானத்தில் அம்மனிடம்
செலுத்தி தங்களது நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். பக்தர்களுடன் வந்த
அங்காளப்பரமேஸ்வரி உற்சவ அம்மனுக்கு பொது மக்கள் தீப ஆராதனை செலுத்தி வழிபட்டனர். விழாவையொட்டி உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் உத்திரமேரூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு
விழாகுழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி என்.மணி மற்றும்

No comments