Disqus Shortname

காவித்தண்டலம் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்

உத்திரமேரூர் பிப் 14
உத்திரமேரூர் அடுத்த காவித்தண்டலம் கிராமத்தில் மக்களை தேடி
வரும் வருவாய் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் உத்திரமேரூர்
வட்டாட்சியர் பேபிஇந்திரா தலைமை தாங்கினார். காவித்தண்டலம்,
ஒரக்காட்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகவேல், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர்கள் ராஜா, ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றனர். முகாமில் காவித்தண்டலம் ஒரகாட்பேட்டை, காவூர் பகுதிகளில் இருந்து குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 84 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 21 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.  49 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேலும் இம்முகாமில் நிகழ்ச்சியில்  வருவாய் ஆய்வாளர் பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் கெங்கன் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments