Disqus Shortname

எலிமருந்து கலந்த தண்ணீரை குடித்த பெண் பலி

உத்திரமேரூர் பிப், 05

உத்திரமேரூர் அடுத்த எடமச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்பிள்ளை(44)
இவரது மனைவி எல்லம்மாள்(38). இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்,
தங்களது விவசாய நிலத்தில் எலிகள் தொல்லை அதிகமாக இருப்பதால் எலிகளை கொல்ல
எலி மருந்து வாங்கி சமையலறையில் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று
முன்தினம் மாலை தனது வீட்டில் குடிநீர் அருகே இருந்த எலிமருந்து
எதிர்பாரத விதமாக குடிநீரில் தவறி விழுந்து விட்டது. அதை அறியாத
எல்லம்மாள் தண்ணீரை அருந்தினார். சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் நேற்று சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார். இது குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறது.

No comments