Disqus Shortname

வேடபாளையத்தில் பக்த ஆஞ்சநேயர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

உத்தரமேரூர் பிப்,3
உத்தரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட தமிழ் நாடு நுகர் பொருள் வாணிப கழகம்  அலுவலகம் முன்புறமாக அமைந்துள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமையன்று  காலை 7.45 மணி அளவில் மிக சிறப்பாக நடந்தது. இங்கு பல ஆண்டுகளாக  பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் ஆலய திருப்பணிகளும் பல்வேறு விஷேச பூஜைகளும் சிறப்பாக நடந்தது. பக்த ஆஞ்சநேயர் 17-அடி உயரம் உள்ள சுதை சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. பிற்கல் 12 மணியளவில் பக்தர்களுக்கு அண்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் உத்தரமேரூர் பேரூராட்சி தலைவர் சுமதிகுணசேகரன், வி.இராஜா, எம்.ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.   

No comments