Disqus Shortname

தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து விடுதல்

உத்தரமேரூர் பிப்,11
காஞ்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கே.கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில்  உத்தரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மானாம்பதி கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் செவ்வாய் கிழமையன்று  புளுகிராஸ் அமைப்பு உதவியுடன் வெறி நாய்க்கடி நோய் ஏற்படாமல் தடுக்க 40 தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கொள்ளை  நோய் அலுவலர் மருத்துவர் கே.செண்பகவல்லி, மானாம்பதி சமுதாய சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி, மருத்துவர் பி.மைதிலி மானாம்பதி கண்டிகை ஊராட்சி மன்றத்தலைவர் வி.பி.ஜான், கிராம நிர்வாக அலுவலர் முருகன் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.தாமரைச்செல்வம், புளுகிராஸ் அமைப்பை சேர்ந்த வேல்முருகன் குழுவினர் கலந்து கொண்டனர்.

No comments