உத்தரமேரூரில் 21ம்தேதி மின் தடை
உத்தரமேரூர் பிப்-20
தமிழ்நாடு மின்சார வாரியம், காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், தெற்குகோட்டத்தில் உள்ள களியாம்பூண்டி, மாகரல், பெருநகர்துணை மின் நிலையங்களில் 21.02.2014 வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதனால் உத்தரமேரூர், நீரடி, வேடபாளையம், காரணிமண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்புலிவனம், மருதம், சிலாம்பாக்கம், ஆண்டித்தாங்கல், மாகரல், ஆர்ப்பாக்கம், களக்காட்டூர், இளையனார்வேலூர், காவான்தண்டலம், காவாம்பயிர், கம்மராஜபுரம், ஆதவப்பாக்கம், புலிவாய், ஆசூர், நெய்யாடுவாக்கம், மலையாங்குளம், வயலக்காவூர், படூர், சிறுமைலூர்,
பெருநகர், மானாம்பதி, ஆக்கூர், தண்டரை, ஆலத்தூர், உக்கல், கூழமந்தல்,
தேத்துறை, அத்தி, இளநீர்க்குன்றம் அதைச்சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்
விநியோகம் தடைபடும் என தெற்கு காஞ்சிபுரம் செயற்பொறியாளர் ஆவுடைசாமி அறிவித்துள்ளார்.
No comments