Disqus Shortname

வேனை ஓவர் டேக் செய்தபோது பஸ் மோதி மாணவன் பரிதாப பலி

ராஜசேகர்
உத்தரமேரூர் பிப்-22:
வேனை முந்தி செல்ல முயன்றபோது பஸ் மோதி தனியார் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.உத்திரமேரூர் அடுத்த கம்மாளப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (19) இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று(21.02.2014)  மாலை 5.30 மணியளவில் தனது சகோதரர்கள் கலைதாசன், பிரசாத்துடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பருத்திகொல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே தனியார் பஸ் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக இரு வாகனங்களுக்கு இடையே சென்றார்.

இதில், தடுமாற்றமடைந்த ராஜசேகர் பஸ் மீது வலது கையை வைத்தார். பஸ் சென்ற வேகத்தில் அவரது  கை துண்டானது.  மயக்கமடைந்த ராஜசேகர் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னால் இருந்த கலையரசன், பிரசாத் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கலைதாசன், பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை:வேனை முந்தி செல்ல முயன்றபோது பஸ் மோதி தனியார் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.உத்திரமேரூர் அடுத்த கம்மாளப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (19) இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று மாலை 5.30 மணியளவில் தனது சகோதரர்கள் கலைதாசன், பிரசாத்துடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பருத்திகொல்லை பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே தனியார் பஸ் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக இரு வாகனங்களுக்கு இடையே சென்றார்.

இதில், தடுமாற்றமடைந்த ராஜசேகர் பஸ் மீது வலது கையை வைத்தார். பஸ் சென்ற வேகத்தில் அவரது  கை துண்டானது.  மயக்கமடைந்த ராஜசேகர் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னால் இருந்த கலையரசன், பிரசாத் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜசேகர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கலைதாசன், பிரசாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். - See more at: http://www.tamilmurasu.org/latest_news.asp?Nid=26245#sthash.bbL9xKPY.dpuf

No comments