Disqus Shortname

உத்தரமேரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

உத்தரமேரூர் பிப், 07
உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழ்நாடு விவசாய சங்க வட்டசெயலாளர் வி.கே.பெருமாள் தலைமை தாங்கினார். டி.தாண்டவராயபிள்ளை, கே.குப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கே.நேரு, மாவட்ட தலைவர் சி.பாஸ்கரன். எஸ்.கெம்பு, ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்திட வேண்டும் வறட்சி நிவாரணமாக நெல்லுக்கு ரூ.15 ஆயிரம் மானாவாரி பயிறுக்கு ரூ.7,500 ம், தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.2ஆயிரம் இதர பயிர் பாதிப்பிற்கேற்ப நிவாரணம் வழங்கிட வேண்டும் உத்தரமேரூர் வட்டத்தில் வறட்சியை பயன்படுத்தி  ஏரி, குளங்களை ஆழப்படுத்த வேண்டும் உத்தரமேரூர் வட்டத்தில் செல்லும் செய்யாற்றில்  வெங்கச்சேரி, பெருநகர் பகுதியில் தடுப்பனைகட்டி நீராதாரத்தை வளப்படுத்த வேண்டும் கோமாரி நோயால் இறந்த கால்நடைகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கண்டனவுரையாற்றினார்கள்

No comments