Disqus Shortname

உத்தரமேரூரில் வைகுண்டஏகாதசி ஸ்ரீசுந்தரவரதர் பாதசேவை - கருடசேவை

உத்தரமேரூர் டிச-24
உத்தரமேரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஞாயிறன்று இரவு 6.30 மணி ஸ்ரீ சுந்தரவரதர் நின்ற கோலத்தில் பாதசேவை தரிசனம் தொடங்கியது. வருடத்திற்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் பெருமாளின் பாதசேவையை தரிசிக்கமுடியும்திங்களன்று விடியற்காலை 2.30 மணி அளவில் உத்தரமேரூரில் உலக பிரசித்தி பெற்ற குடவோலை முறை மூலம் தேர்தல் நடந்த ஸ்ரீவைகுண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்ததுஸ்ரீ சுந்தரவரதரை பக்தர்கள் விடியற்காலை முதலே நீண்ட வரிசையில் சென்று சுந்தரவரதர் பாதசேவைகள் தரிசித்தனர்காலை 6 மணி அளவில் விஸ்வரூபதரிசனம் முடிந்தபின் ஸ்ரீசுந்தரவரதர் கருடவாகனத்தில் ராயர்தெரு, தாயார்தெரு, பெரியநாராசம்பேட்டை, திருமலையாபிள்ளைதெரு, சின்னநாராசம்பேட்டை, திருமலையாபிள்ளை தெரு, வீரபெருமாள் அய்யங்கார்தெரு, கடைவீதி வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஆர்.சேஷாத்ரி செய்திருந்தார்.

No comments