மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு விழா
உத்தரமேரூர், ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலைப்பள்ளியில் அண்மையில்
அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமையம் சார்பில் உத்தரமேரூர்
ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட
குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. ஒன்றியக்குழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை
வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் எ.இராஜேந்திரன் அனைவரையும்
வரவேற்றார்.
விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்ட மாற்றுத்திறன்
குழந்தைகள் 40 பேருக்கு உத்தரமேரூர் சட்டபேரவை உறுப்பினர் வாலாஜாபாத்
பா.கணேசன் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். ஒன்றிய கழக செயலாளர்கள்
வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன் உட்பட
பலர் கலந்துகொண்டனர். இப்பள்ளியின் புரவலவர் நிதிக்கு சட்டபேரவை
உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் ரூபாய் 5 ஆயிரமும், அதிமுக நிர்வாகிகள்
தலா ஆயிரம் வீதம் 20 ஆயிரமும் ஆக மொத்த தொகை ரூ 25 ஆயிரம் பள்ளித்தலைமை
ஆசிரியர் சுந்தரவரதனிடம் வழங்கினார்கள்.
No comments