Disqus Shortname

உத்தரமேரூர் அருகே பைக்கிள் சென்ற இருவர் மரணம்

உத்தரமேரூர் டிச,28
உத்தரமேரூர் அருகே வெவ்வேறு விபத்தில் பைக்கில் சென்ற 2 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர் உத்தரமேரூர் தாலுக்கா  ஆர்.என்.கண்டிகையில் வசிப்பவர் பிரான்சீஸ் (43) இவர் புதன்கிழமையன்று பைக்கில் மானாம்பதி சென்று விட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வீட்டின் அருகே வந்த போது எதிரே வந்த பைக் மோதியதில் பிரான்சீஸ் படுகாயம் அடைந்துள்ளார். உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரான்சீஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார் பெருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர் உத்தரமேரூர் வட்டம் குப்பையநல்லுாரியில் வசிப்பவர் பரமசிவம் (46) இவர் புதன்கிழமையன்று எல்.எண்டத்துாருக்கு நடந்து சென்ற போது எதிரே வந்த பைக்மோதியது இதில் பரமசிவமும், மற்றொரு பைக்கில் வந்த தங்கவேலுவும் காயமடைந்தனர். இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி காரியமங்கலத்தை சேர்ந்த தங்கவேலு (48) பரிதாபமாக காலமானார் பரமசிவத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து உத்தரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments