Disqus Shortname

மறைந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஐஸ்வர்யாவிற்கு அமைச்சர் ஜீ.கே.வாசன் அஞ்சலி

உத்தரமேரூர் டிச,25
காஞ்சி மாவட்டம் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மறைந்த எஸ்,டி,என்.ஐஸ்வர்யாவிற்கு திங்கட்கிழமையன்று அவரது சொந்த ஊர் உத்தரமேரூர் தாலுக்கா அகரம்துாளி கிராமத்தில் சாந்த ஓமம் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது, இதில் ராஜ்யசபா உறுப்பினரும் மத்திய கப்பல் துறை அமைச்சருமான  ஜீ,கே,வாசன் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் ஞானதேசிகன் காஞ்சி மாவட்ட பாராளுமன்ற தொகுதி முன்னாள்  இளைஞர் காங்கிரஸ் தலைவர் மலையூர் புருஷோத்தமன் கலந்து கொண்டு ஐஸ்வர்யா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள் காஞ்சி மாவட்டம் உத்திரமேரூர்  வட்டார நகர காங்கிரஸ் கட்சியினர் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments