Disqus Shortname

ஒட்டந்தாங்கலில் 13.25 லட்சத்தில் நியாயவிலைகடை, ஊ.ம.கட்டிடம் திறப்பு விழா

உத்தரமேரூர் டிச - 29
உத்தரமேரூர் தாலுக்கா, ஒட்டந்தாங்கல் கிராமத்தில் சனிக்கிழமையன்று எம்.எல்.ஏ. தொகுதி நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள
நியாயவிலைகடை ரூ.8.25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இடை நிரவல் நிதி 2012-13 புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா நடந்தது.



 ஊராட்சி மன்றத்தலைவர் ரேவதி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரியமாலா (கி.ஊ) வரவேற்றார்.  உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு 5 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலை கடையையும், 8.25 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தையும் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
 
ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர்
டி.சந்திரமௌலி, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கே.தயாளன், களியாம்பூண்டி தங்க. பஞ்சாட்சரம், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மானாம்பதி கண்டிகை மகளிர்அணி ஒன்றிய துணைச்செயலாளர் ஜே.லூசியாஜேம்ஸ், தண்டரை தணிகைவேல், ராவத்தநல்லூர் மகளிர் அணி செயலாளர் அற்புதமேரி, ஒன்றிய குழு உறுப்பினர் பி.அமலோற்பவராஜ், துணைத்தலைவர் வி.எம்.அருள்தாஸ், அமுதா சந்திரன், பெருநகர் கருணாமூர்த்தி, இளைஞரணி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.கே.பி.வேலு, பொ.சசிகுமார், சத்யாநரசிம்மன், பி.குணா,  மேனலூர் வேலாயுதம், குப்பன், வி.பி.சதிஷ், இளையராஜா, கே.சி.எம்.விஜய், அ.பி.சத்திரம் கோ.பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நா.மாரிச்சாமி நன்றி கூறினார்.

No comments