Disqus Shortname

பூரண மதுவிலக்கு அமுல்படுத்தக்கோரி ஊர்வலம்

உத்தரமேரூர் டிச-22

        உத்தரமேரூர் ஒன்றியம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்
சனிக்கிழமையன்று பூரண மதுவிலக்கு அமுல்படுத்தக்கோரி ஊர்வலம் நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவர் உதயம்ராஜா தலைமை தாங்கினார்.  மாவட்ட துணைச்செயலாளர்
ஜி.கருணாகரன் முன்னிலைவகித்தார்.  வழங்கறிஞர் அணி கே.சங்கரன் அனைவரையும்
வரவேற்றார்.  கிழக்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.தயாளன்,
எல்.மணிவண்ணன் மற்றும் பார்த்தசாரதி, தாஸ், பெருமாள், எஸ்.ஆர்.கிருஷ்ணன்
உட்பட மதிமுக வினர் உத்தரமேரூர் பஜார்வீதி கடைகள்  மற்றும் பொதுமக்களிடம்
மதுஒழிப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.  பேரறிஞர் அண்ணா, டாக்டர்
அம்பேத்கார், டாக்டர் எம்.ஜி.ஆர், பெரியார் சிலைகளுக்கு மாலை
அணிவித்தனர். நகர தொண்டர் படை  செயலாளர் எஸ்.பொன்னுசாமி நன்றி கூறினார்.

No comments