Disqus Shortname

உத்திரமேரூரில் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஆலய உரியடி விழா

உத்திரமேரூர் ஆக, 26
உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள ஸ்ரீ.வேணுகோபால் சுவாமி ஆலயத்தில்
நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைப்பெற்றது. கிருஷ்ணஜெயந்தி
விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்  செய்யப்பட்டு 
பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு ஸ்ரீ.வேணுகோபால் சுவாமி
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வானவேடிக்கைகளுடன் முக்கிய மாட வீதியின் வழியாக உர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்வின் போது குழந்தைகள் கண்ணன், இராமர், சீதா, ராதை, ஹனுமன் போன்ற வேடங்கள் அணிந்து ஊர்வலம் வந்தனர். சுவாமி கோவிலை வந்தடைந்தவுடன் கோவில் வளாகத்தில் உரியடிவிழா விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் உரியடிவிழாவில் கலந்து கொண்டு உரியை அடித்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை
விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments