Disqus Shortname

திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

உத்திரமேரூர் ஜீலை 31:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவமாணவிகளுக்கிடையே புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி நேற்று நடந்ததுநிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.சுந்தர் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்மாவட்ட இலக்கிய அணிஅமைப்பாளர் டி.வி.கோகுலகண்ணன் அனைவரையும் வரவேற்றார்எம்.எல்.ஏக்கள் எழிலரசன், புகழேந்தி,மாவட்ட தலைவர் ஆ.கோ.பாண்டுரங்கன், இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் லயன்.டி.கே.கோபாலகிருஷ்ணன்லயன்கோ.காளிதாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் .ரா.நாகன்,உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், நகர செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டு அதில் முதல் 3இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழும்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள்சான்றிதழ் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டதுஇப்போட்டிக்கு உத்தரமேரூர், காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 1500 மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர். நிகழ்சசியில் விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, தணிஸ்லாஸ், சன்பிராண்ட் ஆறுமுகம், அப்துல்மாலிக், குமார், ஏழுமலை, டாக்டர் உசேபன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்முடிவில் மாவட்ட இலக்கிய அணிபொருளாளர் நாத்திகம்நாகராஜன் நன்றி கூறினார்.

No comments