உத்திரமேரூரில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உத்திரமேரூர் ஆக, 19
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று சத்துணவு
ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 அம்சக் கோரிகைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுந்தரவடிவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு கால முறை ஊதியத்தை நீக்கி கால முறை ஊதியம் வழங்கிடுக, ஓய்வூதியம் 3500 உட்பட அகவிலைப்படி வழங்கிடு, பணிக் கொடை 3 லட்சமாக வழங்கிடுக, உணவீட்டு செலவுகளை உயர்த்தி வழங்கு, சத்துணவு பணியில் காலி பணியிடங்களை பேர்கால அடிப்படையில் நிரப்பிடு, உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அரசு உழியர்கள் சங்கத்தினர் மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் சத்துணவு ஊழியர்கள் சங்கம், அரசு உழியர்கள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய துணைத் தலைவர் மணி நன்றி கூறினார்.
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நேற்று சத்துணவு
ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 அம்சக் கோரிகைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். பொருளாளர் சுந்தரவடிவேல் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு கால முறை ஊதியத்தை நீக்கி கால முறை ஊதியம் வழங்கிடுக, ஓய்வூதியம் 3500 உட்பட அகவிலைப்படி வழங்கிடு, பணிக் கொடை 3 லட்சமாக வழங்கிடுக, உணவீட்டு செலவுகளை உயர்த்தி வழங்கு, சத்துணவு பணியில் காலி பணியிடங்களை பேர்கால அடிப்படையில் நிரப்பிடு, உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அரசு உழியர்கள் சங்கத்தினர் மற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் சத்துணவு ஊழியர்கள் சங்கம், அரசு உழியர்கள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய துணைத் தலைவர் மணி நன்றி கூறினார்.
No comments