Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மின்னல் தாக்கி 45 செம்மரிஆடுகள் பலி

உத்திரமேரூர் ஆக, 24

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (23-08-2016) இரவு பலத்த மழை பெய்யதது. இதில் உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் உத்திரமேரூர்  அடுத்த கம்மாளம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் 49 ஆடு வியாபாரி. இவரது 104 செம்மரிஆடுகளை தட்டியில் கட்டி விட்டு அருகில் காவலுக்காக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மழை துவங்கியதை கண்ட லட்சுமணன் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்யத் துவங்கியது. தட்டியில் விடப்பட்டிருந்த ஆடுகளை மின்னல் தாக்கியது. இதில் தட்டியில் இருந்த 104 ஆடுகளில் 45 ஆடுகளை மின்னல் தாக்கியதில் 45 ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைகண்ட விவசாயி கதறி அழுதார். பின்னர் நேற்று காலையில் வட்டாட்சி நிர்வாகம் காவல்துறையினறுக்கு தகவலளித்தனர். தகவலின் பேரில் அரசு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆடுகளை அரசு கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின் ஆடுகளை பள்ளம் தோண்டி அடக்கம் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.

No comments