Disqus Shortname

கல்லமாநகர் கிராமத்தில் ஸ்ரீகெங்கையம்மன், ஸ்ரீகோட்டை மாரியம்மன் ஆலய 111 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா

உத்திரமேரூர் ஆக, 19
உத்திரமேரூர் அடுத்த கல்லமாநகர் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆலயம் ஸ்ரீகெங்கையம்மன், ஸ்ரீகோட்டை மாரியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தில் 111 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா நேற்று துவங்கியது. மூன்று நாள் திருவிழாவில் முதல்  நிகழ்வாக விழாவையொட்டி பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. காப்பு கட்டிய பக்தர்கள் விரதமிருந்து கல்லமாநகர் வலம்புரி ஸ்ரீவினாயகர் ஆலயத்தில் விரதமிருந்த பக்தர்கள் 501 பேர் பால் குடம் ஏந்தி முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டும், வேப்பிளை ஆடை அணிந்து நேத்திக்கடன்களை நிறைவேற்றினர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  விழாவிற்கான ஏற்பாடுகளை ரங்கநாதன், ஜெகதீசன், செந்தில்குமார் விழா குழுவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தினர்.

No comments