Disqus Shortname

உத்திரமேரூரில் சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்

உத்திரமேரூர் 17Aug 2016
சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  பேருந்து நிலையத்தில் சபாநாயகர் தனபால் உருவபொம்மையை எரித்து 100க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று(17-08-2016) போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்.. ஸ்டாலின் குண்டுகட்டாக வெளியேற்றம்!

 சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ குணசேகரன் பேசிய போது, நமக்கு நாமே என்று கூக்குரல் இட்டவர்கள் எல்லாம் கோட்டையை பிடிக்கமுடியாது" என்று குறிப்பிட, அதை அவைக் குறிப்பிலிருந்து நீக்க தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதே நேரத்தில், மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு கருத்து தெரிவித்தார். ஆனால், அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் தனபால் நீக்கினார். அதை எதிர்த்து தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடவே, அவர்களை அவையை விட்டு கூண்டோடு வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம், தி.மு.க. உறுப்பினர்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தி.மு.க உறுப்பினர்களை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். மேலும், தி.மு.க உறுப்பினர்களின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர், இன்று அவை நடவடிக்கைகள் முடிவடைவதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் விவாதத்துக்கு நாளை பதில் அளிப்பார்கள் என்றும் அறிவித்ததை அடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

இதனால்  சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களை ஒருவாரம் சஸ்பெண்ட் செய்ததற்கு கண்டனம் தெரிவித்து   உத்திரமேரூரில் சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

 

No comments