பாலேஸ்வரம் கிராமத்தில் வருவாய் திட்ட முகாம்
உத்திரமேரூர் ஆக 19
உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் நேற்று வருவாய் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அகிலாதேவி கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 31 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 04 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 01
மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 26 மனுக்கள் நிலுவை உள்ளது. நிகழ்ச்சியில்
வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் நேற்று வருவாய் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவரத்தினம் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் அகிலாதேவி கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 31 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்டது. அதில் 04 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது, 01
மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 26 மனுக்கள் நிலுவை உள்ளது. நிகழ்ச்சியில்
வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
No comments