Disqus Shortname

மானாம்பதியில் அம்மா ஆரோக்கியத்திட்டம்

உத்திரமேரூர் ஆக, 18
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தமிழக முதல்வரின் நலத்திட்டங்களில் ஒன்றான அம்மா ஆரோக்கியத்திட்டம்  சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை, பொது மருத்துவம், இ.சி,ஜி, ஸ்கேன் பரிசோதனைகள் பெண்களுக்கு மார்பக புற்று நோய் பரிசோதனை, பெண்கள் சிறப்பு மருத்துவம், தோல், கண் உள்ளிட்ட பிரிவுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிறப்பு சிகிச்சைக்காக பல்வேறு நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்காக மானாம்பதி, காரணை, கண்டிகை, பெருநகர், விசூர், ராவத்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 164 பேர் சிகிச்சை பெற்றனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி, தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

No comments