Disqus Shortname

தூக்கு போட்டு பெண் தற்கொலை

உத்திரமேரூர் ஜுன் 16:
உத்திரமேரூர் அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, இளம்பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்திரமேரூர் அருகே, வேடபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன். இவரது மனைவி கனகா 24. இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு தற்போது எட்டு மாத கை குழந்தை உள்ளது. இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று முன்தினம், மதியம் 4:00 மணிக்கு, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கனகா வீட்டின் சிமென்ட் ஓடுகளை தாங்கிய இரும்பு பைப்பில் துாக்கு போட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பகுதியில் வசிக்கும் கனகாவின் தந்தை பாண்டியன் 55, உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இத்தற்கொலை
சம்பவம் குறித்து ஆர்.டி.ஒ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments