Disqus Shortname

உத்திமேருர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கானொலி மூலம் திறந்து வைத்தார்.

உத்திரமேரூர் ஜுன் 16
உத்திரமேருர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்காக கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை நேற்று கானொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம் 2012-2013 நிதியாண்டில் 1 கோடியே 60 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.க.சண்முகம் உத்திரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜபாத்பா.கணேசன் காஞ்சி பாராளுமன்ற உறுப்பினர் மரகதம்குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றியக் குழுத் தலைவா் ஆர்.கமலகண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர்,  ஒன்றிய செயாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு உத்திரமேரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் த.காந்தம்மாள்தருமன், கு.சுமதிகுணசீலன், வாலாஜபாத் ஒன்றிய குழுத் தலைவர் என்.எம்.வரதராஜலு, ஊராட்சி மன்ற தலைவர்கள் பூந்தண்டலம்ராஜேந்திரன், புலியூர்பழனி, லூசியாஜேம்ஸ் மற்றும் உத்திரமேரூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், எஸ்.பிரகாஷ்பாபு ஆகியோர் நன்றி கூறினார்.

No comments