Disqus Shortname

உத்திரமேரூரில் லோக் அதாலத்

உத்திமேரூர் 6/15/2015
: உத்திரமேரூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் சிவில் மற்றும் குற்றவியல் என 36 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.77,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

No comments