Disqus Shortname

கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம்

உத்திரமேரூர் ஜீன் 23

 நலத்திட்டங்கள் வழங்கும் விழா


உத்திரமேரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி தெற்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் உத்திரமேரூர் ஒன்றிய பேரூர் மற்றும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இணைந்து மெகா இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று உத்திரமேரூரில் நடந்தது, காஞ்சி தெற்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் லயன் டி.கே.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார், ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன் வரவேற்றார்,தலைமை செயற்குழு உறுப்பினர் இரா,நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல், ஆகியோர் முன்னிலை வகித்தனர், காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் .சுந்தர் முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார், உடன் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் டி.வி.கோகுலகண்ணன், நாத்திகம் நாகராஜன் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், எல்.எஸ்.ரவிந்தர்நாத்.,மாவட்ட பிரதி நிதிகள் இரா.மணி, வெ.குணசேகரன், வெ.கோவிந்தராஜ், தா.சுப்பராயன்,தொழிற்சங்க நிர்வாகி டி.சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர் முகாமிற்கு 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் அவர்களை பரிசோதித்த போது  178 பேர்க்கு கண் பார்வை குறைபாடு இருப்பது தெரியவந்தது, அதில் 63 பேருக்கு கண்ணாடி வழங்குவதற்கு பரிந்துரை செய்யப்பட்டது, 115 பேர்க்கு கண் அறுவை சிகிச்சைகாக தேர்வு செய்யபட்டனர், முதற்கட்டமாக 25 பேரை கண் அறுவை  சிகிச்சைக்காக ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர், மாவட்ட இலக்கிய துணை அமைப்பாளர் கோ.காளிதாஸ் நன்றி கூறினார்

கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம்

உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில்  உத்திரமேரூர் பேரூர் செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல் தலைமை தாங்கினார்.தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள்  டி.கே.கோபாலகிருஷ்ணன்,  பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன் அனைவரையும் வரவேற்றார், நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மாநில கொள்கைபரப்பு செயலாளருமான திருச்சிஎன்.சிவா மற்றும் காஞ்சி தெற்கு மாவட்ட கழக
செயலாளர் க.சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்
தொழிற்சங்க நிர்வாகி டி.சுந்தர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பெ.மணி, மாவட்ட பிரதி நிதி வெ.கோவிந்தராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு 150 ஏழை எளியவர்களுக்கு வேட்டி சேலைகளும்  220 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் ஏராளமான திமுக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

No comments