Disqus Shortname

உத்திரமேரூரில் சாலை விபத்தில் ஒருவர் பலி

உத்திரமேரூர் 21-06-2015:
உத்திரமேரூர் அடுத்த, ஓங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி, 51. இவர், நேற்று, பிற்பகல், 3:00 மணிக்கு, உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே, சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்தோணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதில், படுகாயமடைந்த அந்தோணியை அப்பகுதியினர் மீட்டு, உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி,
அந்தோணி, நேற்று பிற்பகல், 3:30 மணிக்கு இறந்தார்.

No comments