உத்திரமேரூரில் இலவச யோகா பயிற்சி முகாம்
உத்திரமேரூர் ஜீன் 21
உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில்
ஞாயிற்றுக்கிழமையன்று சர்வ தேச யோகா தினத்தை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றிய பாரதிய
ஜனதா கட்சியின் சார்பில் இலவச யோகா பயிற்சி முகாம் நடத்தினார்கள். பி.ஜே.பி ஒன்றிய
அமைப்பாளர் சி.பிரேம்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் டி.ராஜவேலு தலைமை தாங்கினார்.
பேரூராட்சி தலைவர் சுமதிகுணசேகரன், ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.திருஞானசம்பந்தம், டாக்டர்
கே.பரமசிவம், நகர நிர்வாகி ராமச்சந்திரன், ஏழுமலை, உடற்கல்வி இயக்குனர் பழனிவேல், வழக்கறிஞர் மணி ஆகியோர்
முன்னிலை வகித்தனர். திருக்கோவில் வழிபாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் கோ.கண்ணன், சின்னத்திரை
தென்றல் புகழ் ராஜா, யோகா பயிற்சியாளர் எஸ்.இளையராஜா கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.
இந்தப் பயிற்சியில் பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு
பயிற்சி பெற்றனர். முடிவில் ஏ.கே.கணேஷ் நன்றி
கூறினார்.
No comments