சூறாவளி காற்றில் விழுந்த மின்கம்பம் சரி செய்யப்படுமா?
உத்திரமேரூர் ஜீன் 03 2015:
உத்திரமேரூரில் கடந்த 25-ம் தேதி இரவு சூறாவளி காற்று வீசியதை அடுத்து, பல்வேறு இடங்களில் மின்கம்பங்களும் மரங்களும் சாய்ந்தன. இதனால் சிலாம்பாக்கம், ஒழுகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் சிலாம்பாக்கத்தின் ஒருசில பகுதியில் கடந்த ஒரு வார காலமாக உடைந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்படவில்லை. அறுந்த மின்வயர்களும் மாற்றப்படவில்லை.இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.இதனால் மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், இவ்வழியாக நெடுஞ்சாலை செல்வதால், இரவு நேரங்களில் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. தற்போது பள்ளிகளும் திறக்கப்பட்டதால், மாணவர்கள் இரவு நேரங்களில் பாடங்களை படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை என்று பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் இன்றுவரை மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.இப்பகுதியில் உடனடியாக மின்சாரம் கிடைப்பதற்கு மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
உத்திரமேரூரில் கடந்த 25-ம் தேதி இரவு சூறாவளி காற்று வீசியதை அடுத்து, பல்வேறு இடங்களில் மின்கம்பங்களும் மரங்களும் சாய்ந்தன. இதனால் சிலாம்பாக்கம், ஒழுகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் சிலாம்பாக்கத்தின் ஒருசில பகுதியில் கடந்த ஒரு வார காலமாக உடைந்த மின்கம்பங்கள் சரிசெய்யப்படவில்லை. அறுந்த மின்வயர்களும் மாற்றப்படவில்லை.இதனால் பல பகுதிகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.இதனால் மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், இவ்வழியாக நெடுஞ்சாலை செல்வதால், இரவு நேரங்களில் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. தற்போது பள்ளிகளும் திறக்கப்பட்டதால், மாணவர்கள் இரவு நேரங்களில் பாடங்களை படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தங்கள் பகுதியில் மின்சாரம் இல்லை என்று பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் இன்றுவரை மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.இப்பகுதியில் உடனடியாக மின்சாரம் கிடைப்பதற்கு மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments