Disqus Shortname

உத்திரமேரூரில் திமுகவினர் தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

உத்திரமேரூர், ஏப்ரல் 10
உத்திரமேரூர், சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில், அதிமுக அரசின் நிர்வாக
சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நேற்று நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கெ.ஞானசேகரன் தலைமை
தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட விவசாய அணி
அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, இரா.ஸ்டாலின், கோபாலகிருஷ்ணன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் கலந்து
கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில்
போதிய மருததுவர்கள் இல்லாத அவல நிலையினையும், உத்திரமேரூர் ஏரியினை
முறையாக தூர்வாரப்படாததையும், ஆந்திர பேலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட
தமிழர்களுக்காக தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காததை
கண்டித்தும், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் இல்லாததால்
கடந்த 2 வருடங்களாக ரேஷன் கார்டுகள் பொது மக்களுக்கு முறையாக
வழங்கப்படாதது, பால் மற்றும் பஸ் போன்ற பல்வேறு கட்டணங்கள் உயர்த்து
போன்ற மக்கள் விரோதப் போக்கை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், பேரூர் செயலாளர்
பாரிவள்ளல்,  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணி, உட்பட பலர் கலந்து
கொண்டனர்.


No comments