Disqus Shortname

உத்திரமேரூர் பாலர் நேசன் நடுநிலைப்பள்ளி 119-வது ஆண்டு விழா

உத்திரமேரூர் ஏப்,09

 உத்திரமேரூர் பாலர்நேசன் நடுநிலைப்பள்ளி 119-வது ஆண்டு விழா நேற்று
பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் உரிமையியல்
மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் தலைமை
தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் சுமதிகுணசேகரன் முன்னிலை வகித்தார்.பட்டதாரி அறிவியல் ஆசிரியர் சந்திரன் அனைவரையும் வரவேற்றார். தலைமைஆசிரியை  கிறிஸ்டினாள்ஜெபமணி  ஆண்டறிக்கை  வாசித்தார். கனரா வங்கி மேலாளர் ஆர்.சாந்தலிங்கம் பள்ளியின் ஆலேசகர் மகேந்திரன்லில்லிமேரிபுஷ்பராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக பள்ளி மாணவ-மாணவியர்களிடையே பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், மற்றும் பல்வேறு  விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி மாணவ-மாணவியர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி நிர்வாகி புஷ்பராஜி, பட்டதாரி ஆசிரியை அற்புதமேரி, இடைநிலை ஆசிரியை சுமதி உட்பட பல்ர் பங்கேற்றனர்.

No comments