Disqus Shortname

ஸ்ரீ.திரௌபதை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


உத்திரமேரூர் பிப்03

உத்திரமேரூர் பெரிய நாராசம் பேட்டை தெருவில் உள்ள சுமார் 600 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஸ்ரீ.திரௌபதை அம்மன் கோவில். இக்கோவிலில் புணரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைப்பெற்றது. பணி முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நேற்று வெகு
கோ.ப.செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நங்கையர்குளத்திலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு கலசத்தின் மீது புனித நீர் உற்றி பக்தர்கள் மீது
தெளிக்கப்பட்டது. விழாவிற்கு எம்.எல்.ஏகள் வாலாஜாபாத் பா.கணேசன்,
வி.சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய விழாகுழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். உற்சவ ஸ்ரீ.திரௌபதை அம்மன் திருவீதி உலா பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள்
விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷேகதை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் கணபதிபூஜை, வாஸ்துசாந்தி, அஷ்டதிக்குபூஜை, முதல்காலபூஜை, கலசபூஜை, ஹோமம், நவக்கிரஹபூஜை, துர்கைபூஜை, துவாரபூஜைகள் போன்ற பல்வேறு பூஜைகள்  நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்திபீடம்  ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவனத்தலைவர் கே.ப.அன்பழகன் ஆன்மிக  இயக்க இளைஞரணி தலைவர்

கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

No comments