Disqus Shortname

அரசாணிமங்கலம் பள்ளியில் 94 ஆம் ஆண்டுவிழா

உத்திரமேரூர் ஏப்,17

உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் 94வது ஆண்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் முருவம்மாள் செல்வம் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்
வெங்கடாசலபதி அனைவரையும் வரவேற்றார்.  பட்டதாரி ஆசிரியை அந்துவனிதா
ஆண்டறிக்கை வாசித்தார். இவ்விழாவில் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
எ.பச்சையப்பன், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜீலியட் சிறப்பு
விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி
சிறப்புரையாற்றினார்கள். முன்னதாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இடையே
பேச்சு, கட்டுரை, கவிதை, ஓட்டபந்தையம் போன்ற பல்வேறு போட்டிகள்
நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் காட்டுப்பாக்கம் அரசு பள்ளி தலைமை
ஆசிரியர் ராஜ்குமார், ஆசிரியர் பயிற்றுனர் ரவிக்குமார், பட்டாதாரி
ஆசிரியர் சி.குமார் மற்றும் கிராம மக்கள் உட்பட ஏராளமானோர்
கலந்துக்கொண்டனர்.

No comments