100 சவரன் பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது
உத்திரமேரூர் ஏப்,14:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உத்திரமேரூர் - காஞ்சிபுரம் கூட்டுசாலையில், நேற்று முன்தினம், தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகிக்கும் படியான மூன்று வாலிபர்களை, போலீசார் மடக்கினர். அவர்களை விசாரணை செய்தபோது, இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இருவர், தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி தப்பிக்க முயன்றனர். இதையடுத்து, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜான் (எ) ஜான்பாண்டியன் 30, செய்யார் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடராயபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் 30, சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ராம் (எ) ராம்குமார், 24, என்பது தெரிய வந்தது. இவர்கள், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மொத்தம், 28 இடங்களில் தங்க செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி திருட்டுகளில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அவர்களிடமிருந்து, 100 சவரன் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்த வாலிபர்களை, உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, நேற்று, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உத்திரமேரூர் - காஞ்சிபுரம் கூட்டுசாலையில், நேற்று முன்தினம், தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகிக்கும் படியான மூன்று வாலிபர்களை, போலீசார் மடக்கினர். அவர்களை விசாரணை செய்தபோது, இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இருவர், தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி தப்பிக்க முயன்றனர். இதையடுத்து, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜான் (எ) ஜான்பாண்டியன் 30, செய்யார் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடராயபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் 30, சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ராம் (எ) ராம்குமார், 24, என்பது தெரிய வந்தது. இவர்கள், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மொத்தம், 28 இடங்களில் தங்க செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி திருட்டுகளில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அவர்களிடமிருந்து, 100 சவரன் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்த வாலிபர்களை, உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, நேற்று, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
No comments