தண்ணீர் பிடிப்பதில் சண்டை பள்ளி மாணவி தீக்குளிப்பு
உத்திரமேரூர் ஏப்ரல் 12:
முதியவர் தகாத வார்த்தையால் பேசியதால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து பலியானார். உத்திரமேரூர் அடுத்த மேனல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட விக்கரமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (40). மனைவி முனியம்மாள் (37). இவர்களுக்கு பச்சையம்மாள் (20), ரேவதி (16) என்ற இருமகள்கள் உள்ளனர். ரேவதி பிளஸ் 2 தேர்வு எழுதியிருக்கிறார். இவர்கள் வீட்டின் அருகில் பாஞ்சாலை (70) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இரு குடும்பத்தாருக்கும் கடந்த சில நாட்களாக தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை ரேவதி தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பாஞ்சாலைக்கும், ரேவதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியவுடன் முதியவர் மற்றும் அவரது உறவினர்களும் ரேவதியை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரேவதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இது தொடர்பாக உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
முதியவர் தகாத வார்த்தையால் பேசியதால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து பலியானார். உத்திரமேரூர் அடுத்த மேனல்லூர் பஞ்சாயத்திற்குட்பட்ட விக்கரமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (40). மனைவி முனியம்மாள் (37). இவர்களுக்கு பச்சையம்மாள் (20), ரேவதி (16) என்ற இருமகள்கள் உள்ளனர். ரேவதி பிளஸ் 2 தேர்வு எழுதியிருக்கிறார். இவர்கள் வீட்டின் அருகில் பாஞ்சாலை (70) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இரு குடும்பத்தாருக்கும் கடந்த சில நாட்களாக தெரு குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை ரேவதி தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பாஞ்சாலைக்கும், ரேவதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியவுடன் முதியவர் மற்றும் அவரது உறவினர்களும் ரேவதியை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரேவதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இது தொடர்பாக உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
No comments